கடிதம்...!!!

ஒரு முறைக்கு பல முறையாய்
படித்துப்பார்க்க ....
புத்தகங்களுக்குள் வைத்து
கல்லூரிக்கு எடுத்துச்செல்ல ....
வீடு மாற்றும் போதேல்லாம்
பத்திரமாய் பாதுகாக்க ...
செல்லரித்துப்போன இடங்களில்
சொல் நிரப்பி காப்பாற்ற ....
கையெழுத்தின் அழகில்
சில நேரம் மயங்கிக்கிடக்க ....
எழுத்துப்பிழையான இடங்களை
சுட்டிக்காட்ட ....
எழுதிய தேதியில் இருந்து
இன்றைய தேதி வரை கணக்கிட ....
படித்துக்கொண்டிருக்கும் வேளையில்
யாராவது வந்துவிட்டால்
பதற்றமடைந்து மறைத்து வைக்க ...
ஒவ்வொரு எழுத்தின் இடைவெளியிலும்
உன் முகம் பார்த்து ரசிக்க .....
இதுவரை என்னிடம் இல்லை ...
நீ எழுதியதாய் ஒரு கடிதம் கூட .....!

--தனபால்

Comments

Popular posts from this blog

உன் வாசலில்